Our Feeds


Saturday, October 8, 2022

ShortTalk

நாமல் ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள புதிய முக்கிய பதவி!



தேசிய சபையின் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால தேசிய கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.


நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் நாமல் ராஜபக்சவின் பெயரை முன்மொழிந்துள்ளார், அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் வழிமொழிந்துள்ளார்.

இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் எம்.பி.க்கள், அரச கொள்கைகளை உருவாக்குவது குறித்து தங்களது யோசனைகள் மற்றும் ஆலோசனைகளை முன்வைத்தனர்.

பொது நிர்வாகம், சுகாதாரக் கொள்கை, கல்விக் கொள்கைகள், மீன்பிடி மற்றும் உணவுக் கொள்கை, மின்சாரம் மற்றும் எரிசக்திக் கொள்கை, காலநிலை மாற்றக் கொள்கை, தொழில் முனைவோர் கொள்கை ஆகிய துறைகளில் நிபுணர்களை அழைத்து யோசனைகளைப் பெற கட்சியின் உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »