Our Feeds


Sunday, October 16, 2022

ShortTalk

குறிப்பிட்ட நேரத்தில் இலங்கை கடனை திருப்பிச் செலுத்தும்- பங்களாதேஷ் நம்பிக்கை..!



அடுத்தாண்டு மார்ச் மாதம் செலுத்த வேண்டிய 200 மில்லியன்

அமெரிக்க டொலர் கடனை இலங்கை செலுத்தும் என நம்புவதாக பங்களாதேஷ் தெரிவித்துள்ளது.


இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பில் சாதகமான பதில்கள் தெரிவிக்கப்பட்டதாக பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநர் அப்துர் ரவூப் தாலுக்டர் அந்நாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.


சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த கூட்டங்களுடன் இணைந்து பங்களாதேஷ் மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »