ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கமசிங்க இன்று நாடாளுமன்றில் ஆற்றிய விசேட உரை மீதான விவாதத்தை இன்றைய தினம் எடுத்துக்கொள்வதற்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஜனாதிபதியின் விசேட உரை மீதான விவாதம் இன்று இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதியின் ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸிற்கான விஜயத்தின் போது நாட்டுக்கு கிடைக்கப்பெற்றுள்ள பொருளாதார முன்னேற்றம் குறித்தும், நாட்டின் தற்போதைய நிலைமை குறித்தும் ஜனாதிபதி இன்று (06) நாடாளுமன்றத்தில் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.