Our Feeds


Tuesday, October 18, 2022

ShortTalk

மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்..!




முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மீதான

பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 8ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இந்த வழக்கு இன்று (18) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் அழைக்கப்பட்டது.


அதன்போது, ​​குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கம நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.


அங்கு முன்வைக்கப்பட்ட காரணிகளை பரிசீலித்த உயர்நீதிமன்ற நீதிபதி, வழக்கின் மேலதிக விசாரணையை டிசம்பர் 8ஆம் திகதிக்கு அழைக்குமாறு உத்தரவிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »