Our Feeds


Tuesday, October 4, 2022

SHAHNI RAMEES

முழு வங்கதேசமும் பகல் முதல் இருளில் மூழ்கியது..!

 

மின் விநியோகக்கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக முழு பங்களாதேஷிலும் இன்று பகல் முதல் மின்துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாட்டின் 140 மில்லியன் மக்களும் இருளில் மூழ்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அந்நட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதற்கும் மின்சாரததை வழங்கும் பிரதான மின் விநியோகக்கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாகவும், நிலைமையை சரி செய்வதற்கான அனைத்து செயற்பாடுகளையும் தாம் மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »