Our Feeds


Tuesday, October 18, 2022

ShortNews

திலினி பிரியமாலியின் கணவர் எனக் கூறப்படும் இசுரு பண்டார குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது..!

 

350 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை பலரிடமும் பெற்று மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் கணவர் எனக் கூறப்படும்  இசுரு பண்டார குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரான திலினி பிரியமாலி மேற்கொண்ட பல பாரிய நிதி மோசடிகளுடன் இந்தச் சந்தேக நபரும் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




சந்தேக நபரான இசுரு பண்டார, இதற்கு முன்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பல சந்தர்ப்பங்களில் வாக்குமூலங்களை வழங்கியிருந்த நிலையில் நேற்றும் (17) வாக்குமூலமளிக்க வந்தபோது அவர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரான இசுரு பண்டார, திலினி பிரியமாலியின் கணவனாகவும் காதலனாகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் என்பது விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »