வசந்த முதலிகே, கல்வெவ சிறிதம்ம தேரர், ஹஷாந்த குணதிலக்க
ஆகியோர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் எவ்வாறான அரசாங்க விரோத செயலில் ஈடுபட்டுள்ளனர் என்பதை அரசாங்கம் கூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.தற்போது வசந்த முதலிகேவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், சிறைச்சாலையில் இருந்து இரவு நேரங்களில் அவர் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
நாட்டுக்கு எதிரான மனித உரிமைப் பிரேரணைகளுக்கு அரசாங்கமே உத்வேகம் அளிக்கும் எனத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அதற்காகத்தான் மாணவர் போராட்டங்கள் தாக்கப்படுகின்றனவா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தான் தீவிரவாதத்திற்கு எதிரானவன் என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர், பயங்கரவாதம் என்ற பெயரில் அப்பாவி மக்களை சிறையில் அடைப்பதையும் எதிர்ப்பதாகத் தெரிவித்தார்.