Our Feeds


Tuesday, November 1, 2022

ShortTalk

08 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை.



நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகத்திற்கு 03ம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அதேசமயம் 08 மாவட்டங்களில் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு 1 ஆம் மற்றும் 2 ஆம் நிலை எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.


அந்தவகையில் கண்டி, கேகாலை, குருநாகல், மொனராகலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பகுதிகளிக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »