Our Feeds


Monday, November 7, 2022

ShortTalk

மு.க வின் தலைவராக மீண்டும் ஹக்கீம் தேர்வு | 20 ஐ ஆதரித்த பைசல் காசிம் & தௌபீக் MP க்களுக்கு மன்னிப்புடன் முக்கிய பதவி


ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு இன்று புத்தளத்தில் நடைபெற்றது.





கட்சியை விட்டு இடைநிறுத்தப்பட்ட பைஷல் ஹாசிம்.எம், எஸ் தெளபீக் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர் பேராளர் மாநாட்டில் கலந்து கொண்டார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் கலந்துக்கொள்ளவில்லை.


புதிய நிர்வாகிகள் தெரிவு இடம்பெற்றது. குறிப்பாக கட்சியை விட்டு இடைநிறுத்தப்பட்டவர்களுக்கு பதவிகள் வழங்கக் கூடாது என உயர்பீட உறுப்பினர்களுக்கு மத்தியில் கடும் நிலைப்பாடு இருந்தது. இருந்த போதிலும் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹாபீஸ் நஸீர், எச்.எம்.ஹரிஸ் தவிர்ந்த ஏனைய இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பதவிகள் வழங்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தார்.

இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக் கட்சியின் தேசிய அமைப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

கட்சியின் பொருளாளராக நாடாளுமன்ற உறுப்பினர் பைஷல் காசிம் தெரிவு செய்யப்படார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதித் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாஹீர் மெளலானா பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

முன்னாள் மாகாண அமைச்சர் உதுமாலெப்பை பிரதி தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

கட்சியின் ஸ்தாபக செயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ.கபூர் மீண்டும் பிரதித் தலைவராக தெரிவு செய்யப்படார்.

தவிசாளராக முழக்கம் மஜீத், செயலாளராக சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், தலைவராக ரவூப் ஹக்கீம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச் எம் எ ஹரிஸ், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் எல் தவம், ஆரிப் சம்சுதீன் கலந்து கொள்ளவில்லை.

திகாமடுல்ல நிருபர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »