Our Feeds


Monday, November 7, 2022

News Editor

மாணவர்கள் மீது மின்சாரம் பாய்ச்சி கொடூரமாக தாக்கிய அதிபர்



 

களுத்துறை மில்லனிய பிரதேச பாடசாலை ஒன்றில் 5ஆம் தரத்தில் கல்வி கற்கும் மூன்று மாணவர்களை தாக்கி கொடூரமாக சித்திரவதை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய மில்லனிய பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் குறித்து விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான மாணவர்கள் ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் உதயகுமார தெரிவித்துள்ளார்.

அங்கு அதிபர் உட்பட பல ஆசிரியர்களால் மாணவர்கள் மண்டியிட வைத்து கடுமையாக தாக்கி தண்டித்துள்ளனர். பின்னர், சம்பவம் குறித்து தலைமை ஆசிரியர் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, பொலிஸார் பாடசாலைக்கு வந்துள்ளனர். மூன்று பிள்ளைகளின் முகத்திலும் உடலிலும் தடியடி தாக்குதல் மேற்கொண்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டுள்ளன. பின்னர் கம்பியால் மின்சாரம் பாய்ச்சியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »