Our Feeds


Monday, November 7, 2022

ShortTalk

பாலியல் சர்ச்சையில் சிக்கியுள்ள கிரிக்கெட் வீரர் தனுஷ்கவின் விசாரணை செலவீனங்களை யார் பொறுப்பேற்பது?



யுவதியொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்க தொடர்பான விசாரணைகளுக்கான செலவீனங்களை, அவர் தனிப்பட்ட ரீதியில் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.


விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க, ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிற்கு இது தொடர்பில் அறிவித்துள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் ஸ்ரீலங்கா கிரிக்கெட், தனுஷ்க குணதிலக்கவிற்கு அறிவித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது தனுஷ்க குணதிலக்கவின் தனிப்பட்ட பிரச்சினை என்பதனால், அதற்கான செலவீனங்களை விளையாட்டுத்துறை அமைச்சு ஏற்காது என விளையாட்டுத்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »