Our Feeds


Friday, November 25, 2022

News Editor

உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்ற இலங்கை அதிகாரிகளுக்கு ஒரு நாளுக்கு தலா 800 டொலர் செலுத்திய எஸ்.எல்.சி


 

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற உலகக்கிண்ண கிரிக்கட் தொடரில் கலந்துகொள்வதற்காக ஸ்ரீ லங்கா கிரிக்கட் நிறுவனத்தின் அனுசரணையில் சென்ற அதிகாரிகளுக்கும் அதிகாரிகள் அல்லாத தரப்பினருக்கும் நாளாந்தம் 800 அமெரிக்க டொலர் வீதம் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழு அதன் தலைவர் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் தலைமையில் அண்மையில் (22) நாடாளுமன்றத்தில் கூடிய போதே இந்தக் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

அனைத்து வசதிகளுடனும் ஒரு நாளைக்கு 800 டொலர் நிதி ஒருவருக்கு செலுத்தப்பட்டுள்ளதுடன், அதிகாரிகள் அல்லாத தரப்பினரும் இந்த வசதியின் கீழ் சுற்றுலாவில் கலந்துகொண்டுள்ளதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »