Our Feeds


Tuesday, November 29, 2022

News Editor

இணையம் ஊடாக பணம் மோசடி : 8 பேர் கைது !


 

இணையம் ஊடாக பணம் மோசடி செய்தமை தொடர்பில் 8  பேர் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

13,765,000 ரூபாவை  மோசடி செய்தமை தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்படி கடந்த  26ஆம் திகதி நிதி மற்றும் வர்த்தக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாதுவ, பிலியந்தலை, பண்டாரவளை மற்றும் காலி ஆகிய இடங்களில் இடம்பெற்ற பண மோசடி  சம்பவங்களுடன்  தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் காலி, வெலிகம, ரத்கம, வாதுவ மற்றும் பட்டியகெதர ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட 22 மற்றும் 36 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

சந்தேகநபர்கள் கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது நாளை (30) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »