Our Feeds


Tuesday, November 1, 2022

ShortNews

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் மோதிய நபர் உயிரிழப்பு.



கடந்த மாதம் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் வாகனம் மோதியதில் காயமடைந்த நபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி குருநாகல்-புத்தளம் வீதியை அண்டிய சுற்றுவட்ட வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தை காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து, அவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் இராஜாங்க அமைச்சரின் சாரதி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் மீண்டும் கைதாகலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புத்தளம் முள்ளிபுரத்தைச் சேர்ந்த 48 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »