Our Feeds


Monday, November 21, 2022

ShortTalk

கோடிக்கணக்கில் அபேஸ் பண்ணிய திலினியின் காதலனாக கருதப்படும் இசுரு பண்டாரவின் தொலைபேசி உரையாடல்கள் தொடர்பில் விசாரணை!



பாரிய நிதி மோசடி குற்றச்சாட்டுக்கு உள்ளான திலினி பிரியமாலியின் காதலனாக கருதப்படும் இசுரு பண்டாரவின் தொலைபேசி உரையாடல்  தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. 


குறித்த உரையாடல் தொடர்பில்  இசுரு பண்டாரவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுறது.

சமூக ஊடகங்களில் கூறப்படுவது போன்று தனது உரையாடல்  சிறைச்சாலைக்குள்ளிருந்து மேற்கொள்ளப்பட்டது அல்ல என  இசுரு பண்டார தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஒலிப்பதிவு மற்றும் உரையாடல் எந்தத் தொலைபேசியில் எப்போது இடம்பெற்றது என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »