Our Feeds


Tuesday, November 29, 2022

News Editor

இளைஞர்களை மூர்க்கத்தனமாக தாக்கிய பொலிஸ், இராணுவத்தினர்




யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் தலைக்கவசம் அணியாது சென்ற இளைஞர்களை வழிமறித்து பொலிஸார் , இராணுவத்தினர் மற்றும் பொலிஸ் விசேட அதிரடி படையினர் ஆகியோர் இணைத்து மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த இளைஞனை வைத்தியசாலையில் அனுமதிக்காது , பொலிஸார் கைது செய்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

மானிப்பாய் ஆலடி சந்தியில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மானிப்பாய் ஆலடி சந்தியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் இருந்த வேளை , குறித்த வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரு இளைஞர்களில் பின் இருக்கையில் அமர்ந்திருந்தவர் தலைக்கவசம் அணியாது இருந்துள்ளார்.

அவர்களை வழிமறித்த பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த வேளை , ” தாம் தலைக்கவசம் அணியாதது தவறு தான், அதற்கு தண்டத்தை எழுதித் தாருங்கள், நேரமாகிவிட்டது” என கூறியுள்ளார்.

பொலிஸாருடன் இளைஞர்கள் திருப்பி கதைத்ததும் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அதன் போது , அருகில் இருந்த இராணுவத்தினர் இளைஞர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் இராணுவத்தினர் எவ்வாறு தாக்கலாம் என முரண்பட்ட போது , பொலிஸாரும் இராணுவத்தினருடன் இணைந்து தாக்கியுள்ளனர்.

அதேநேரம் வீதியில் மோட்டார் சைக்கிள்களில் வந்த பொலிஸ் விசேட அதிரடி படையினரும் இறங்கி இளைஞர்கள் மீது கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

அதனை அடுத்து அங்கு பொதுமக்கள் கூடியதும் , காயமடைந்த இளைஞனை கைது செய்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »