Our Feeds


Monday, November 14, 2022

News Editor

கொழும்பிற்கான விமான சேவையை மீண்டும் தொடங்கிய ஜசீரா எயார்வேஸ்


 

குவைத் எயார்லைன்ஸ் ஜசீரா எயார்வேஸ் கொழும்பிற்கான விமான சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.

ஜசீரா எயார்வேஸ் குவைத்துக்கும் கொழும்பிற்கு இடையில் வாரத்திற்கு மூன்று முறை விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளது.

இதேவேளை, இந்த புதிய விமானங்கள் கொழும்பில் இருந்து 50க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இணைக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொழும்பிற்கான மேலதிக விமான சேவைகள் மூலம் இலங்கையில் அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க முடியும் என்றார் அமைச்சர்.

சமீபத்திய வாரங்களில், பிரான்ஸ், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ரஷ்யாவிலிருந்து பல விமான நிறுவனங்கள் கொழும்பிற்கான விமானங்களை மீண்டும் தொடங்கியுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »