தற்போது அமுலில் உள்ள எரிபொருள் விலைக்கு அமைவாக ஒரு லீற்றர் டீசலுக்காக அரசுக்கு 12 ரூபா நட்டம் ஏற்படுவதாக எரிசக்தி மற்றும் மின்சக்தி இராஜாங்க அமைச்சர் டீ.வீ.சானக்க தெரிவித்துள்ளார்.
இன்று (09) நாடாளுமன்றத்தில் எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, விலை சூத்திரத்திற்கு அமைய எரிபொருள் விலையை மாற்றுவதாக உறுதியளித்ததாகவும், ஆனால் இம்முறை விலைச்சூத்திரத்தின்படி எவ்வித மாற்றமும் ஏற்படாது என அறிவித்ததன் மூலம் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாகவும் ஹேஷா விதானகே சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.