Our Feeds


Saturday, November 19, 2022

News Editor

மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது


 

பாதுக்கயில் உள்ள பாடசாலை ஒன்றில்,கடந்த 8ஆம் திகதி தரம் 10 இல் கல்வி கற்று வரும் மாணவர் மீது பௌத்த பாடம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தாக்கியுள்ளதாக குறித்த மாணவன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோர் மாணவரை ஹோமாகம பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கும் மற்றும் ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கும் அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன்போது, குறித்த ஆசிரியரின் தாக்குதலில் மாணவனின் இடது காது பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நேற்று (18) ஹோமாகம நீதவான் நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பாதுக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக ஆசிரியர்களினால் மனிதாபிமானமற்ற முறையில், தாக்குதலுக்கு உள்ளாகி மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »