Our Feeds


Monday, November 14, 2022

SHAHNI RAMEES

இலங்கை ரக்பி அணித் தலைவி கொரியாவில் மாயம்..!



தென்கொரியாவில் இடம்பெற்ற ரக்பி போட்டித்

தொடருக்காக சென்ற இலங்கை மகளிர் அணியின் தலைவர் டுலானி பல்லேகொண்டகே தென்கொரியாவில் வைத்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையடுத்து கொரிய ரக்பி சங்கத்தின் ஊடாக இலங்கை மகளிர் ரக்பி அணியின் முகாமையாளர் அந்த நாட்டு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.


நேற்று பிற்பகல் 1 மணியளவில் நிறைவடைந்த இலங்கை மற்றும் ஹொங்கொங் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டியில், இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது. இதையடுத்து நேற்றிரவு 11.30 அளவில் இலங்கை அணி இன்சியான் விமான நிலையத்திலிருந்து புறப்படவிருந்தது.


இதையடுத்தே இலங்கை மகளிர் அணியின் தலைவர் டுலானி பல்லேகொண்டகே காணாமல் போயுள்ளதாக  இலங்கை மகளிர் அணியின் முகாமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

🔴 BUDGET 2023 - LIVE UPDATE...

- இன்று(14) பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் பஜ்ஜட் 2023

#ParliamentLive #ShortnewsTV #RanilWickremesinghe







Subscribe to this Blog via Email :
Previous
Next Post »