Our Feeds


Thursday, November 10, 2022

News Editor

தாய்லாந்து செல்கிறது அளுத்கம கந்தே விகாரையின் யானை!



 முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் காலத்தில் தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட இரண்டு யானைகளில் ஒன்றான ‘முத்துராஜா’ சிகிச்சைக்காக தாய்லாந்துக்கு அனுப்பப்படவுள்ளது.

இந்த யானை கடந்த 25 வருடங்களாக அளுத்கம கந்தே விகாரையின் பாதுகாப்பில் இருந்தது.

தாய்லாந்து அரசாங்கம் இந்த யானையை சிகிச்சைக்காக அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்துள்ளதாக விகாரையின் பொறுப்பதிகாரி கொகவிட்ட விபுலசார தேரர் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »