Our Feeds


Friday, November 25, 2022

News Editor

தொடர்மாடியிலிருந்து கீழே வீசப்பட்ட குழந்தை உயிரிழப்பு : போதைப்பொருளுக்கு அடிமையான உறவினர் கைது!


 

கொழும்பு - 14 கிராண்ட்பாஸ் சமகிபுர தொடர்மாடி குடியிருப்பின் மேல் மாடியிலிருந்து  கீழே வீசப்பட்டு ஒன்றரை வயது குழந்தை ஒன்று  உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று (25) இடம்பெற்றுள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனக் கூறப்படும் அந்தக் குழந்தையின் உறவினர் ஒருவரே குறித்த குழந்தையை இவ்வாறு கீழ தூக்கி வீசியுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.  

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரிடம்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »