Our Feeds


Monday, November 7, 2022

ShortTalk

தனுஷ்க குணதிலக்க தவிர்ந்த ஏனைய இலங்கை கிரிக்கெட் வீரர்கள் நாட்டை வந்தடைந்தனர்



பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள தனுஷ்க குணதிலக்க தவிர்ந்த ஏனைய அனைத்து இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களும் நாட்டை வந்தடைந்துள்ளனர்.


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இலங்கை அணி வீரர்கள் சற்று முன்னர் வந்தடைந்துள்ளனர்.

உலகக் கிண்ண இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டிக்காக இலங்கை அணி வீரர்கள் அவுஸ்திரேலியா சென்றிருந்தனர்.

இந்த நிலையில், உபாதை காரணமாக போட்டியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட தனுஷ்க குணதிலக்க, அவுஸ்திரேலியாவில் யுவதியொருவரை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, அந்த நாட்டு பொலிஸாரினால் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டிருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »