Our Feeds


Monday, November 7, 2022

ShortTalk

ஹம்பாந்தோட்டை கடலில் கைப்பற்றப்பட்ட 300 KG ஹெரோயின்



ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் 300 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.


இந்த சோதனை நடவடிக்கை இன்று (நவ.06) அதிகாலை முன்னெடுக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு மீன்பிடி படகுகள் மற்றும் சிறிய ரக படகொன்றும் பொலிஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு, கடற்படை, பொலிஸார் இணைந்து இந்த சோதனையை முன்னெடுத்திருந்தனர்.

சந்தேகநபர்கள் ஹம்பாந்தோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »