Our Feeds


Monday, November 7, 2022

ShortNews

BREAKING: பாலியல் சர்சையில் சிக்கிய தனுஷ்கவை அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து இடைநிறுத்த தீர்மானம்.



இலங்கை கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணதிலக்கவை, அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து இடைநிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.


அவுஸ்திரேலியாவில் யுவதியொருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தனுஷ்க குணதிலக்க நேற்று (நவ.06) அதிகாலை அந்த நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இதையடுத்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட தனுஷ்க குணதிலக்கவிற்கு பிணை வழங்க அந்த நாட்டு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையிலேயே, ஸ்ரீலங்கா கிரிக்கெட் இந்த தீர்மானத்தை எட்டியுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிர்வாக குழு அவசரமாக கூடி, இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »