நாட்டில் இன்னும் சில தினங்களில் எரிபொருளின் விலையை குறைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறு காணப்படுவதால் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் எரிபொருள் பெற்றுக்கொள்வதை நிறுத்தியுள்ளனர்.
தற்போது உள்ள விலைக்கு எரிபொருளை வாங்கி பின் விலை குறைக்கப்பட்டவுடன் அந்த விலைக்கு விற்பனை செய்ய முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் உள்ள எரிபொருள் நிலையங்களில் மக்கள் மீண்டும் வரிசையில் நிற்கத் தொடங்கியுள்ளனர்.