இது ரிச்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகிவுள்ளது.
இந்நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் ஆழத்தில் நிலை கொண்டுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.
நேற்று காலை நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் ரிச்டரில் 4.5 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது.
டோட்டி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 3 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியானது.
இந்நிலையில், நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்ததில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.