Our Feeds


Wednesday, November 23, 2022

ShortTalk

VIDEO: முடியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வேன் - சஜித்துக்கு அமைச்சர் சாமர பகிரங்க சவால்!



அடுத்த வருடத்திற்குள் இரத்தினக்கல் துறையில் 500 மில்லியன் ரூபா வருமானத்தை தன்னால் ஈட்டிக்கொடுக்க முடியுமெனவும், இல்லாவிட்டால் தான் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாகவும் ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தில் இன்று (23) இடம்பெற்ற வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஏறக்குறைய ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான இரத்தினக்கற்கள் நாட்டை விட்டு வெளியே கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும், அதன் வருமானம் இன்னும் நாட்டிற்கு கிடைக்கவில்லை எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் இரத்தினக்கற்கள் மூலம் கிடைத்த வருமானம் 170 மில்லியன் டொலர்களே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »