மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனுக்கு அந்நாட்டு நீதிமனறம் 11 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பணச்சலவை மற்றும் லஞ்சம் பெற்றமை தொடரபான குற்றச்சாட்டுகளில் அப்துல்லா யாமீ;ன குற்றவாளியாக காணப்பட்டார். அதையடுத்து அவருக்கு 11 வருட சிறைத்தண்டனை விதித்து மாலைதீவு குற்றவியல் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
பணச்சலவை குற்றத்துக்காக 7 வருட சிறைத்தண்டனையும் லஞ்சம் பெற்றமைக்காக 4 வருட சிறைத்தண்டனையும விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது 63 வயதான அப்துலலாயாமீன் 2013 முதல் 2018 வரை மாலைதீவின் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
அத்துடன், 5 மில்லியன் அமெரிக்க டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.