Our Feeds


Friday, December 16, 2022

ShortTalk

பேராதனையில் 24 வயதான தேரரை தாக்கிய 16 வயதான தேரர் பொலிஸ் பொறுப்பில் !



பேராதனை பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்ட  இரண்டு புதிய தேரர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


காயமடைந்த 24 வயதான தேரர் கண்டி தேசிய வைத்தியசாலையின் பிக்கு பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 16 வயதான தேரர் (பிக்கு மாணவர்) பொலிஸ் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளார். 

இந்த மோதல் சம்பவம் 14 ஆம் திகதி புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் பேராதனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »