குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் வருடாந்த அறிக்கையின்படி, 2021 ஆம் ஆண்டில் 3,09,234 இலங்கைப் பிரஜைகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இவர்களில் பெரும் எண்ணிக்கையானோர் அந்த வருடத்தின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
டிசம்பரில், 73, 827 பேரும் மற்றும் நவம்பரில் 55, 527 பேரும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.
இதே ஆண்டில் இலங்கைக்கு வந்துள்ள மொத்த வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 2,54,146 பேராவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.