வேலைத்திட்டம் ஒன்றிற்காக கொண்டு வரப்பட்ட 11 GI குழாய்களை மோசடி செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெலியத்த பிரதேச சபையின் தலைவர் மற்றும் அவரது மூத்த சகோதரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் தங்காலை நீதவான் நீதிமன்றில் இன்று முற்படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.