அமெரிக்காவின் பல பகுதிகளில் கடுமையான பனி புயல்கள் ஏற்படும் என அமெரிக்க தேசிய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் விடுமுறைப் பயணங்களை அது பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
நாட்டின் வடக்கு, கிழக்கு, மத்திய பகுதிகளில் கனத்த பனிப்பொழிவு இருக்கக்கூடும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய குளிர்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வத்தினர் எச்சரித்தனர்.
பயணங்கள் தாமதம் அடையலாம் அல்லது இரத்து செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
எனவே, இதற்குத் தயாராக இருக்குமாறு விமான நிறுவனங்கள் பயணிகளைக் கேட்டுக்கொண்டுள்ளன.