Our Feeds


Sunday, December 18, 2022

News Editor

நீர்கொழும்பு வைத்தியசாலையின் மாடியிலிருந்து குதித்து பெண்ணொருவர் உயிரிழப்பு

 


நீர்கொழும்பில் அமைந்துள்ள வைத்தியசாலையொன்றின் 8 ஆவது மாடியிலிருந்து குதித்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை (டிச. 17) காலை நீர்கொழும்பு வைத்தியசாலையின் 8 ஆவது மாடியிலிருந்து குதித்து படுகாயமடைந்த பெண், அதே வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக நீர்கொழும்பு பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு உயிரிழந்த பெண் நீர்கொழும்பு - அலுத்வத்த பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

குறித்த பெண் கடந்த 14 ஆம் திகதி வயிற்று நோ காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையிலேயே அவர் நேற்று சனிக்கிழமை காலை தங்கியிருந்த விடுதியிலிருந்து ஓடிச்சென்று, 8 ஆவது மாடியிலிருந்து கீழே குதித்துள்ளார்.

கட்டடத்தின் தரைத்தள வளாகத்தில் விழுந்த குறித்த பெண்ணுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கப்பட்டுள்ள போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பு பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »