Our Feeds


Sunday, December 25, 2022

ShortNews

குழந்தைக்கு வயிற்றோட்டம், மருத்துவமனைக்கு செல்லாமல் மந்திரித்த நூல் கட்டிய பெற்றோர் : குழந்தை பரிதாப பலி




குழந்தையின் வயிற்றோட்டத்தை நிறுத்த, பெற்றோர் ஆலயத்தில் நூல் கட்டி காத்திருந்தமையால் குழந்தை உயிரிழந்துள்ளது. 


யாழ்ப்பாணம், நாவாந்துறை பகுதியை சேர்ந்த 8 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.  

குழந்தை கடந்த வியாழக்கிழமை வயிற்றோட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து பெற்றோர் குழந்தையை அருகில் உள்ள ஆலயமொன்றுக்கு தூக்கிச் சென்று, பூஜை செய்து, நூல் கட்டியுள்ளனர்.

இருப்பினும், குழந்தைக்கு வயிற்றோட்டம் நிற்காத காரணத்தால், மறுநாள் வெள்ளிக்கிழமை மாலை குழந்தையை சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ள நிலையிலேயே குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது. 

அதனை தொடர்ந்து நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற குழந்தையின் மரண விசாரணையின் பின்னர், வயிற்றோட்டம் காரணமாக அதிகளவு நீரிழப்பு ஏற்பட்டே குழந்தை உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »