Our Feeds


Monday, December 26, 2022

ShortTalk

இலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிரான அமெரிக்காவின் தடை - எங்களால் எதுவும் செய்ய முடியாது - வெளிவிவகார அமைச்சர்



இலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளமை தொடர்பில் இலங்கை அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காது என வெளிவிவகார  அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.


இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இதனை மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் கீத் நொயர் சித்திரவதை செய்யப்பட்டமை தொடர்பில் மேஜர் பிரபாத் புலத்வத்தைக்கு எதிராக அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் மோர்னிங்கிற்கு இதனை தெரிவித்துள்ளார்.

இது அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் சுயாதீனமான நடவடிக்கை இலங்கை அரசாங்கம் கரிசனைகளை வெளியிடும் ஆனால் தனிப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் எதனையும் தெரிவிக்காது என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது சுயாதீனமான செயற்பாடு அவர்கள் இவ்வாறான விடயங்கள் குறித்து ஆராய்வதற்கான சுயாதீன வழிமுறைகளை கொண்டுள்ளனர்.இது தொடர்பில் நாங்கள் செய்யக்கூடியது எதுவுமில்லை என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் எங்கள் கரிசனைகளை வெளியிடுவோம் ஆனால் தனிப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் எதனையும் தெரிவிக்கமாட்டோம், என குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் நாங்கள் தொடர்ந்து எங்கள் நிலைப்பாட்டை முன்வைப்போம் ஆனால் எங்களால் எதனையும் செய்ய முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »