Our Feeds


Monday, December 26, 2022

ShortTalk

7 கோடி ரூபா பெறுமதியான அரிசி மோசடி: சதொசவின் அநுராதபுரம் களஞ்சிய முகாமையாளருக்கு விளக்கமறியல்!



அநுராதபுரம் சதொச நிறுவனத்தில் சுமார் ஆறு கோடியே தொண்ணூற்று ஏழு இலட்சம் ரூபா பெறுமதியான நாடு மற்றும் சம்பா அரிசியை மோசடி செய்ததாக கூறப்படும் வழக்கு தொடர்பில் நீண்ட விசாரணையின் பின்னர் சந்தேகத்தின் பேரில் இரகசிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அநுராதபுரம் சதொச களஞ்சிய முகாமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


களஞ்சியசாலை, அநுராதபுரம் பிரதான நீதிவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி நாலக ஜயசூரியவே சந்தேக நபரை  ஜனவரி மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க  உத்தரவிட்டார்.

சந்தேக நபர் வெளிநாடு செல்வதை தடுக்கும் வகையில் கட்டுநாயக்க மற்றும் மத்தல  சர்வதேச விமான நிலையங்களின்குடிவரவு குடியகல்வு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »