Our Feeds


Thursday, December 29, 2022

SHAHNI RAMEES

ஒரே குடும்பத்தில் ஆறு உயிர்களை காவுக்கொண்ட பல்லி...!

 

நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் ஆறு பேரை கொண்ட குடும்பமொன்று பல்லியினால் உயிரிழந்துள்ளது.

ஜான் சாமுவேல், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் இரு உறவினர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.


சாமுவேல் வசித்த வீட்டிலிருந்து சத்தம் வராததால், அயலவர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்துள்ளனர்.


இதன்போது, சாமுவேல் உள்ளிட்டோர் ஒவ்வொரு அறையிலும் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர்.

இரவு உணவு உட்கொண்ட பின்னர் அவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், உணவில் விஷம் கலந்தமையே மரணத்திற்கான காரணம் எனவும் நைஜீரிய பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சாமுவேல் உள்ளிட்ட குடும்பத்தினர் இரவு உணவிற்கு எடுத்துக்கொண்ட சூப் பானையில் பல்லியொன்று இறந்து கிடந்தமையை அயலவர்கள் அவதானித்துள்ளனர்.

இதுவே மரணத்துக்கான காரணம் என  நைஜீரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »