பிலிப்பைன்ஸில் ஏற்பட்ட கடும்மழை, வெள்ளத்தால்
6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 19 பேர் காணாமல்போயுள்ளனர்.இதேவேளை, 45,000க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிலிப்பைன்ஸின் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் நேற்று முன்தினம் கிறிஸ்மஸ் தினத்தன்று பலத்த காற்றுடன் கடும்மழை பெய்துள்ளது.இடைவிடாது பெய்த மழையால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்ததில் நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. பல வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
கடும்மழை, வெள்ளத்தால் மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் சுமார் ஒரு இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கிய 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே கனமழை, வெள்ளத்திற்கு இதுவரை 6 பேர் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 19 பேர் காணாமல்போயுள்ளனர். அவர்களின் நிலை என்ன? என்பது தெரியவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.