கையடக்கத்தொலைபேசி தகராறு தீவிரமடைந்ததையடுத்து அங்குலானை பொலிஸ் நிலையத்துக்கு மதுபோதையில் வந்த இருவர் மோதலில் ஈடுபட்டதால் அங்கு அசாதாரண நிலைமை தோன்றிய சம்பவம் 25ம் திகதி இடம்பெற்றுள்ளது.
பின்னர் அவர்களை அவர்களது உறவினர்கள் எனக் கூறிக்கொள்ளும் சுமார் 20 பேர் பொலிஸ் நிலையத்துக்கு வந்து அழைத்துக் கொண்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பின்னர் மோதலில் ஈடுபட்ட இருவரும் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த மோதல் சம்பவம் காரணமாக அங்குலானை பொலிஸ் நிலையத்தில் அசாதாரண நிலைமை தோன்றியதனையடுத்து பொலிஸாரின் பாதுகாப்பை பலப்படுத்தப்பட்டு மேலதிக பொலிஸாரும் அங்கு வரவழைக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.