நாயை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதியின் ஆலோசகர் அசு மாரசிங்கவிற்கு எதிராக பொலிஸ் முறைப்பாடு செய்யப்போவதாக இலங்கையை சேர்ந்த விலங்குகள் உரிமை அமைப்பான ரார் Rally for Animal Rights &Environment தெரிவித்துள்ளது.
ரார் அமைப்பு இது தொடர்பில் தனது முகநூலில் தெரிவித்துள்ளதாவது
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான அசு மாரசிங்க - இவர்களே நாட்டை எப்படி நிர்வகிக்கவேண்டும் என ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்குபவர்கள். பதவி விலகம் மாத்திரம் போதுமானதல்ல.