Our Feeds


Monday, January 23, 2023

ShortTalk

5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறு வெளியாகும் திகதி அறிவிப்பு.



2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் ஜனவரி 27 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.


பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக அவர் கூறினார்.

இதேவேளை, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய்யான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார்.


தமிழ் மிரர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »