Our Feeds


Sunday, January 8, 2023

ShortTalk

ஓமானிலிருந்து 7 பணிப்பெண்கள் நாடு திரும்பினர் ! 4 பணிப்பெண்களுக்கு நாடு திரும்ப வாய்ப்பு மறுப்பு : காரணம் வெளியானது



மானில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு  சொந்தமான 'சுரக்க்ஷா' இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த  வீட்டுப் பெண்கள் 7 பேர் இன்று (8) அதிகாலை கட்டுநாயக்கவை வந்தடைந்தனர்.


இவர்கள் இன்று அதிகாலை 05.21 மணியளவில் மஸ்கட்டில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். 

ஓமானில் உள்ள 'சுரக்க்ஷா' இல்லத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 118 வீட்டுப் பணியாளர்களில் 11 பேரை இலங்கைக்கு அனுப்புவதற்காக மஸ்கட் விமான நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 

இவ்வாறானவர்களில் நான்கு பேரின் ஆவணங்களில் காணப்பட்ட குறைபாடுகள் காரணமாக அவர்களுக்கு நாடு திரும்ப வாய்ப்பு வழங்கப்படவில்லை. 

இந்த நான்கு பணிப்பெண்களும் வென்னப்புவ, திருகோணமலை, கிண்ணியா மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் ஆவர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »