கடந்த ஒன்றரை வருடங்களாக முஸ்லிம் கலாசார திணைக்கள பணிப்பாளராக பதவி வகித்த இப்றாஹீம் அன்சார் கடந்த 31ம் திகதி சேவையிலிருந்து ஓய்வு பெற்ற நிலையில் குறித்த பதவி வெற்றிடமாகியுள்ளது.
முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் பதவிக்கான நேர்முகப் பரீட்சை இன்று புத்தசாசன அமைச்சினால் நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் குறித்த பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த நிலையில் 3 SLAS அதிகாரிகள் விண்ணப்பித்துள்ளனர். இதில் அரணாயக்க பிரதேச செயலாளர் பைசல் ஆப்தீன் அவர்களும் விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே வேலை முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளராக கடமையாற்றி பின்னர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்ட ABM அஷ்ரபும் குறித்த பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
ABM அஷ்ரப் பணிப்பாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் சமூக மட்டத்தில் பல சர்சைகள் தோன்றக் காரணமாக இருந்தார் எனக்கூறி முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கையெழுத்திட்டு அரசாங்கத்திற்கு முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு வேறு பதவிக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் மீண்டும் ABM அஷ்ரம் குறித்த பதவிக்கு விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.