எட்டியாந்தோட்டை, பஹல கராகொடை அல்ஹிக்மா குர்ஆன் மத்ரஸாவின் வருடாந்த பரிசளிப்பு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகள் அண்மையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் விஷேட அதிதியாகக் கலந்து சிறப்பித்த அஷ்ஷெய்க் றஸ்மி ஷாஹித் அமீனி மற்றும் சகோதரர் ஹாரூன் ஆகியோர் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து வெளியேறும் மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைத்தனர்.
விஷேட அதிதிக்கு அல்ஹிக்மா ஜும்ஆப் பள்ளிவாசல் நிருவாக சபைத் தலைவர் சகோதரர் மாஹிர் அவர்கள் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்ததுடன் கற்கை நெறியைப் பூர்த்தி செய்து வெளியேறும் மாணவர்கள் மத்ரஸாவின் அதிபர் அஷ்ஷெய்க் ஏ.கே. முஹம்மத் அவர்களுடன் இருப்பதையும் படங்களில் காணலாம்.