நேற்று ஆரம்பமான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சையில் மரண தண்டனை பெற்ற கைதி ஒருவரும் பரீட்சை எழுதுவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த கைதி சிறைவாசத்தின் போது “அனுஷய ஆசவ” என்ற நாவலையும் எழுதியுள்ளார்.
இதேவேளை, இவருடன் வெலிக்கடை சிறையில் உள்ள நால்வர் உயர்தரப் பரீட்சை எழுதவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரும் இவ்வருடம் உயர்தரப் பரீட்சை எழுதுகின்றார்.