நேபாளத்தில் இன்று (24) மதியம் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லியில் பல இடங்களில் கட்டடங்கள் குலுங்கின. இது ரிச்டர் அளவில் 5.8 ஆக பதிவானது.
இந்திய எல்லை அருகே, நேபாள நாட்டில் இன்று மதியம் 2:28 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் நிலத்திற்கு 10 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
நேபாளத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் டெல்லியின் பல பகுதிகளில் உணரப்பட்டது பல இடங்களில் கட்டடங்கள் குலுங்கியதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.