Our Feeds


Monday, January 23, 2023

SHAHNI RAMEES

நுவரெலியா விபத்தில் உயிரிழந்தோர் தொடர்பில் அமைச்சரவை எடுத்த தீர்மானம்...!

 


நுவரெலியா – நானுஓயா – ரதல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பங்களுக்கும் நட்டஈட்டை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான், இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நுவரெலியா – நானுஓயா – ரதல்ல பகுதியில் கடந்த 20ம் திகதி பஸ் ஒன்று, வேன் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றுடன் மோதியதில் 7 பேர் உயிரிழந்ததுடன், 50திற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »