உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில் குறித்த தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் நாளை வியாழக்கிழமை (5) முதல் ஜனவரி 23 ஆம் திகதி (நண்பகல் 12) வரை ஏற்றுக்கொள்ளப்படும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.