Our Feeds


Friday, January 27, 2023

News Editor

தியவன்னா ஓயாவில் காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு


 தியவன்னா ஓயாவில் மீன்பிடிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனின் சடலம் இன்று (27) அதிகாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.


ராஜகிரிய வெலிக்கடை புத்கமுவ வீதியைச் சேர்ந்த எஸ்.சயுர ஹிம்ஹான என்ற 18 வயது இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.


பாராளுமன்ற வளாகத்தில் ஊடறுத்துச்செல்லும் தியவன்னாஓயா பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயமாகும். 


அதில் அனுமதியின்றி மீன்பிடியில் ஈடுபட்ட இருவரில், ஒருவரே நேற்று (26) காணாமல் போயுள்ளார். 


படகு கவிழ்ந்தபோது மற்றையவர் நீந்தி கரை சேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 


அவர்கள் நேற்று (26) அதிகாலை 02.00 மணியளவில் மீன்பிடிப்பதற்காக வந்ததாகவும், அதிகாலை 04.30 மணியளவில் படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 


சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »